Thursday, November 12, 2009

உலக வங்கித் தலைவர் எச்சரிக்கை கிரடிட், டெபிட் கார்டால் வங்கிகளுக்கு சிக்கல்

0 comments

இந்த ஆண்டில் புதிதாக எந்த பொருளாதாரச் சிக்கலும் ஏற்படாது. ஆனால் 2010ம் ஆண்டில் வங்கிகள் புதிய சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம். பெரும் வேலை இல்லாத் திண்டாட்டம் வங்கிகளை பாதிக்கக்கூடும். அத்துடன் கிரெடிட் கார்டுகள், டெபிட் கார்டுகள், நுகர்வுக் கடன்கள் மூலம் வங்கிகளுக்கு பிரச்சினை வரலாம் என உலக வங்கித் தலைவர் ராபர்ட் ஜோலிக் கூறினார். சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் ராபர்ட் ஜோலிக் கலந்து கொண்டார். மாநாட்டு அரங்கில் செய்தியாளர்களுடன் பேசிய போது, 2010ல் ஆண்டில் வங்கிகள் எதிர் கொள்ளக்கூடிய சிக்கல்கள் பற்றிக் குறிப்பிட்டார். அவர் கூறியதாவது: இதுவரை, உலக நாடுகளின் வளர்ச்சிக்கு அமெரிக்க பொருளாதாரம் உதவியாக இருந்திருக்கிறது.

அமெரிக்காவின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உலக நாடுகள் ஏற்றுமதி செய்தன. இனி அத்தகைய நிலை இராது. அமெரிக்காவின் தேவைகள் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாக இருக்காது. உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியின் பொழுது இந்த மாற்றத்தை வெற்றிகரமாக சமாளித்தாக வேண்டும். உலக நாடுகள் அனைத்தும் பொருளாதாரத் தேக்க நிலையில் இருந்து ஒரே நேரத்தில் விடுபட முடியாது. நாட்டுக்கு நாடு காலம், நேரம், முறை முதலியன மாறுபடக்கூடும். அதனால் உலக நாடுகள் ஒன்றுடன் ஒன்று ஒத்துழைத்தால் சிக்கல்கள் குறையும். தேக்க நிலையில் இருந்து விடுபட புதிய ஊக்குவிப்புச் சலுகைகள் தேவை இல்லை. 2010ம் ஆண்டிலும் சலுகைகள் தொடரலாம் என்றார்.

ஆன்லைன் மூலம் சாஃப்ட்வேர் தீர்வு: மைக்ரோசாஃப்ட் அறிமுகம்

0 comments
சிறிய, நடுத்தர வணிக நிறுவனங்களுக்கு ஆன்லைன் மூலம் சாஃப்ட்வேர் தீர்வுகளை அளிக்கும் புதிய முறையை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

  இதன்படி மாதம் ரூ. 95 கட்டணத்தில் மின்னஞ்சல், இணையதள ஒருங்கிணைப்பு, மின்வழிச் சந்திப்பு சார்ந்த மென்பொருள் சேவைகளை இந்நிறுவனம் அளிக்கிறது. இந்நிறுவனத்தின் இணையதளத்திற்குள் சென்று பயன்பாட்டுக்கு ஏற்ற கட்டணத்தைச் செலுத்தி இச்சேவையைப் பெறலாம். ஹெச்சிஎல், இன்ஃபோசிஸ்டம்ஸ், இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ ஆகிய நிறுவனங்களுடன் இதற்காக மைக்ரோசாஃப்ட் உடன்பாடு செய்துள்ளது.

  சோதனை அடிப்படையில் இந்த சேவை கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. இதை பல நிறுவனங்கள் பயன்படுத்திப் பார்த்து அதில் நல்ல பலன் கிடைத்துள்ளதைத் தெரிவித்ததைத் தொடர்ந்து இம்மாதம் 7-ம் தேதி முதல் முழு வீச்சில் இந்த சேவையை அறிமுகப்படுத்துவதாக மைக்ரோசாஃப்ட் கிளவுட் கம்ப்யூட்டிங் பிரிவின் செயல்முறை மேலாளர் சாஜு குட்டி தெரிவித்துள்ளார். 
 
இணையதள முகவரி: www.microsoft.com/india/onlineservices

ரூ.3,000க்கு கம்ப்யூட்டர் நிவியோ திட்டம்

0 comments
ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து ரூ.3,000 விலையில் கம்ப்யூட்டர் விற்பனையை இந்த மாதம் தொடங்க நிவியோ திட்டமிட்டுள்ளது.

"டெஸ்க்டாப் கம்ப்யூட்டரை ரூ.3,000க்கு விற்பனை செய்ய ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்துள்ளோம்" என நிவியோ தலைவர் சச்சின் துகல் கூறினார். ஏற்கனவே, மைக்ரோசாப்ட்,  ஏர்டெல் நிறுவனங்களுடன் இணைந்து ஆன்லைன் பிசி வசதியை நிவியோ அளிக்கவுள்ளது.

நிவியோ கம்பேனியன் என்ற கருவியை ரூ.4,999ல் அது அறிமுகம் செய்தது.

Wednesday, November 11, 2009

கூகுல் $750 மில்லியன் கொடுத்து வாங்கப்படும் பள்ளி மாணவனால் உருவாக்கப்பட்ட நிறுவனம்.

0 comments
கூகுல் $750 மில்லியன் கொடுத்து வாங்கப்படும் பள்ளி மாணவனால் உருவாக்கப்பட்ட நிறுவனம்.


கூகுள் நிறுவனம் $750 மில்லியன் டாலர் விலைக்கு AdMob என்ற மொபைல் விளம்பர சேவை நிறுவனத்தை வாங்கி உள்ளது. 2006ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிறுவனம் ஒரு பள்ளி மாணவனால் உருவாக்கப்பட்டது.

மொபைல் தொழில்நுட்பம் மிகவும் வளராத காலத்தில் பல இன்னல்களை சந்தித்து வளர்ந்த நிறுவனங்களில் இதுவும் ஒன்று. iPhoneன் வரவுக்குப் பின்பு பல நல்ல முன்னேற்றங்களை அடைந்துள்ளது.

AdMobஐ வாங்குவதன் மூலம் ஒரு நல்ல மொபைல் விளம்பர வாடிக்கையாளர் தொடர்பு மற்றும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட விளம்பர தொழில்நுட்பத்தை கூகுள் வாங்குகிறது.

Techtamil

WIN FREE LAPTOP : http://ezlaptop.com/?r=904180

லேண்ட் லைன் வடிவில் மொபைல் போன் பி.எஸ்.என்.எல். அறிமுகம்

0 comments

முதியோர் எளிமையான முறையில் மொபைல் போன்களை கையளும் வகையில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் லேண்ட் லைன் போன் வடிவில் மொபைல் போன் அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து பி.எஸ்.என்.எல். துணைக் கோட்டப் பொறியாளர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பி.எஸ்.என்.எல். நிறுவனம் மொபைல் போன்களை முதியோர் எளிமையான முறையில் கையாளும் நோக்கத்தில் லேண்ட் லைன் போன் வடிவில் அதே இயக்கத்தில் ஜி.எஸ்.எம். பிக்ஸ்ட் ஒயர்லெஸ் மொபைல் போனை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த போனில் சிம் கார்டுகளை செருகி பேசலாம். தரைவழி தொலைபேசியை எவ்வாறு கையாளுகின்றோமோ அதே போல் எளிமையாக இதை இயக்க முடியும்.

பிரீ பெய்ட், போஸ்ட் பெய்ட் 2 வகையான சிம் கார்டுகளில் எதை வேண்டுமானாலும் இதில் உபயோகிக்கலாம். மொபைல் போனில் உள்ள ஒலியின் தரத்தை விட இதன் ஒலி தெளிவாகவும் நன்றாகவும் இருக்கும். எல்லா பி.எஸ்.என்.எல். நிறுவனங்களிலும் தற்போது இந்த போன் கிடைக்கும். பிரீ பெய்ட் சேவையில் ஒரு வினாடிக்கு ஒரு பைசா என்ற திட்டம் தற்போது அமலில் உள்ளது. இந்த சேவையைப் பெற ரூ.45க்கான பூஸ்டர் கார்டை உபயோகிக்க வேண்டும். இதன் மூலம் தமிழ்நாடு வட்டத்திற்குள் பேசும் போது ஒரு வினாடிக்கு ஒரு பைசா கணக்கிடப்படும். இதைத் தவிர ரூ.49க்கான பூஸ்டர் கார்டை உபயோகிக்கும் போது எந்த மொபைல் போனுக்கு பேசினாலும், எஸ்.டி.டி பேசினாலும் ஒரு நிமிடத்திற்கு 49 பைசா திட்டம் நடைமுறையில் உள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார் துணைக் கோட்டப் பொறியாளர்.

WIN FREE LAPTOP : http://ezlaptop.com/?r=904180 

Tuesday, November 10, 2009

இந்தியாவில் 8000 பேரை பணியமர்த்தும் அக்சென்சர்!

0 comments
அக்சென்சர் மற்றும் குளோபல் டெக்னாலஜி இணைந்து இந்தியாவில் மட்டும் 8000 புதிய பணியாளர்களை வேலைக்கு அமர்த்த உள்ளதாக அறிவித்துள்ளன.


இந்தியாவில் இந்த நிறுவனங்களின் பணியாளர் எண்ணிக்கை 42000 ஆக உள்ளது. இந்த புதிய பணியாளர்களையும் சேர்த்து 50000 பேராக தங்கள் தொழிலாளர் பலத்தை உயர்த்த முடிவு செய்துள்ளதாக அக்சென்சர் தலைவர் வில்லியம் டி கிரீன் தெரிவித்துள்ளார்.

வில்லியம் கிரீன் மேலும் கூறுகையில், "உலகம் மெல்ல மெல்ல சரிவிலிருந்து மீளத் துவங்கிவிட்டதன் அறிகுறிகள் தெரிகின்றன. குறிப்பாக இந்தியாவில் நிலைமைகள் மிகவும் சாதகமாக உள்ளன. எனவே இந்தியாவில் மட்டும் 8000 புதிய பணியாளர்களை பணி நியமனம் செய்யும் பணி விரைவில் துவங்க உள்ளது. அனலிடிக்ஸ் பிரிவில் இந்த பணியாளர்களை ஈடுபடுத்தப் போகிறோம். இந்தியாவில் இந்த பணிக்கு பெரிய அளவில் ஸ்கோப் இருக்கிறது.." என்றார்.

அக்சென்சரின் நடப்பு ஆண்டு வருவாய் 21.58 பில்லியன் டாலர்கள். இந்த ஆண்டு மருந்துகள் உற்பத்தி மற்றும் தொலைபேசித் துறை வாடிக்கையாளர்களை அதிகரிக்கும் முயற்சியில் உள்ளது அக்சென்சர்.

FREE LAPTOP PLAN Join http://ezlaptop.com/?r=904180

பொறியியல் பட்டதாரிகள் 75% பேர் தகுதி குறைவு்

0 comments
பொறியியல் பட்டதாரிகளில் 75 சதவீதம் பேருக்கு வேலைக்கான தகுதியில்லை என்று தொழில் துறை அமைப்பான நாஸ்காம் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்திய தொழில் மற்றும் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு (பிக்கி) சார்பில் இந்திய உயர் கல்வி குறித்த 6வது உச்சி மாநாடு டெல்லியில் நடந்தது. அதில் இடம்பெற்ற குழு விவாதத்தில் வெளியான தகவல்களை அசோசேம் அமைப்பு, அறிக்கையாக வெளியிட்டது. நிகழ்ச்சியில் புனே பொறியியல் கல்லூரியின் இயக்குனர் சகஸ்ரபாது கூறுகையில், பொறியியல் பட்டதாரிகளுக்கு எளிதில் வேலை கிடைக்காததற்கு காரணம், படிப்பை முடித்து வெளிவரும்போது வேலைக்கான தகுதியோ, முன்அறிவோ இல்லாததே. இது முன்னணி கல்லூரிகளில் பட்டம் பெற்றவர்களுக்கும் பொருந்தும் என்றார். நம்நாட்டின் பெரும்பாலான கல்லூரிகளின் கல்வித் திட்டமே பாட அடிப்படையிலானது. தொழிற் பயிற்சி, நேரடி அனுபவம் கிடையாது என்பதே காரணம் என்றார் அவர்.

FREE LAPTOP PLAN Join http://ezlaptop.com/?r=904180  

Related Posts with Thumbnails