சித்து பிளஸ் 2 பர்ஸ்ட் அட்டம்ப்ட் - இது பாக்யராஜ் இயக்கத்தில் அவரது மகன் சாந்தனு நாயகனாக நடித்திருக்கும் படம். படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக சாந்தினி என்ற கல்லூரி மாணவி நடித்திருக்கிறார். இப்படம் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில், சூட்டிங் ஸ்பாட்டில் சாந்தனுவால் தான் விழிபிதுங்கிய கதையை தனக்கே உரிய பாணியில் சுவாரஸ்யமாக பகிர்ந்து கொண்டார். சாந்தனுவோ விவரமாய் பேசி ஆச்சர்யப்படுத்தினார்.
பாக்யராஜ் பேசுகையில், நான் அமிதாப்பச்சனையே வச்சு படம் எடுத்திட்டேன். ஆனால், இவனை வைச்சு எடுக்கறதுக்குள்ளே ஒரு வழியாகிட்டேன். எல்லாத்துலேயும் தலையிடுறான். கம்போசிங்கில் உட்கார்ந்தா அங்க ஒரு கரெக்ஷன். டயலாக் சொல்லிக் கொடுத்தா அதிலே இன்னும் ரெண்டு வரி சேர்த்து சொல்றான். கேமிராவை இங்க வக்கலாம்னு சொன்னா, இது வேணாம். அங்க வையுங்கிறான். சொந்த புள்ளைய வச்சு படம் எடுக்கறது பயங்கர கஷ்டம்ப்பா என்றார். அப்போது குறுக்கிட்ட சாந்தனு, யூத்துங்க சைக்காலஜி எனக்குதானே தெரியும்? அதைதான் நான் சொன்னேன். நான் சொன்ன கரெக்ஷனை யூனிட்ல இருக்கிறவங்களே ரசிச்சாங்க தெரியுமா? என்று சொன்னதுடன், அப்பா படம்ங்கிறதாலதான் நான் தலையிட்டேன். இதுவே வேற டைரக்டர்னா அவரு என்ன சொல்றாரோ, அதான். அப்படியே நடிச்சு கொடுத்திருவேன், என்றும் விவரமாய் பேசினார்.
Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts
Wednesday, November 4, 2009
விவரமாய் பேசும் சாந்தனு ; விழி பிதுங்கிய பாக்யராஜ்
Posted by pavbalane at 9:46:00 AM Labels: சினிமா 0 commentsThursday, October 29, 2009
பணம்தான் மிஞ்சும்... பேராண்மை யூனிட் பெருமிதம்!
Posted by pavbalane at 2:26:00 PM Labels: சினிமா 3 commentsபேராண்மை ஹிட்! ஐங்கரன் பிலிம்சுக்கும் இது முதல் ஹிட்! சந்தோஷத்தை பட்டாசு வெடித்து கொண்டாடாத குறைதான். டைரக்டர் ஜனநாதன், தயாரிப்பாளர் அருண் பாண்டியன், ஹீரோ ஜெயம் ரவி ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தார்கள்.
தொகுப்பாளர் ரொம்பவே ஷார்ப் ஆன ஆள் போலிருக்கிறது. முன்பெல்லாம் கோட் சூட்டோட வருவார் அருண் பாண்டியன். அப்புறம் ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும்போது பளபளப்பு குறைஞ்சு பேண்ட் சட்டைக்கு மாறிட்டார். நல்லவேளை, இந்த படம் ஹிட் ஆச்சு. அதுவும் கொஞ்ச நஞ்ச ஹிட் இல்லை. அவரு ராஜா டிரஸ்சே போடலாம். அந்தளவுக்கு ஹிட் என்றார். அருண் பாண்டியனின் பேச்சில் அநியாயத்திற்கு அழகு. “படத்திலே ஒரு டயலாக் வரும். இங்கிருக்கிற மேசை நாற்காலிகளில் உழைப்பை நீக்கிட்டா வெறும் மரம்தான் மிஞ்சும். இந்த சாக்பீஸ்லே உழைப்பை நீக்கிட்டா வெறும் சுண்ணாம்புதான் மிஞ்சும். இந்த கட்டிடத்திலிருந்து உழைப்பை நீக்கிட்டா வெறும் செங்கல்தான் மிஞ்சும் என்று. இந்த படத்திலிருந்து உழைப்பை நீக்கிட்டா வெறும் பணம்தான் மிஞ்சும்” என்றார்!
“இந்த படத்திலே நான் நடிக்கலே. படிச்சேன்” என்று படு ஸ்டைலாக பேச ஆரம்பித்தார் ஜெயம்ரவி. ஜனநாதன் சார் அவ்வளவு அறிவாளி. அவருக்கு தெரியாத விஷயங்களே இல்லை. அவரு பார்க்கதான் இப்படி இருக்கார். அவரது உலக ஞானம் எல்லையற்றது என்று பாராட்டியவர், இதுக்கு முன்னாடி என்னை பற்றிய பார்வை வேறாக இருந்தது. இந்த படத்திற்கு பிறகு அப்படியே வேறு மாதிரியாக மாறியிருக்கிறது. அதுக்கு காரணமான ஜனநாதன் சாருக்கு நன்றி என்றார்.
Subscribe to:
Posts (Atom)
