Friday, October 30, 2009

கம்ப்யூட்டர் நிறுவனங்கள் பெயர் பெற்ற வரலாறு

0 comments
தகவல் தொழில் நுட்பம் மற்றும் கம்ப்யூட்டர் துறையில் பல நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஒரு சில நிறுவனங்களின் பெயர்கள் நாம் அன்றாடம் சொல்லும் நிறுவனப் பெயர்களாக மாறி உள்ளன. ஆனால் எந்தக் கணமேனும் இந்த நிறுவனங்கள் எப்படி அந்தப் பெயர்களைப் பெற்றன என்று யோசித்துப் பார்த்திருப்போமா! இதோ இப்போது பார்ப்போமா!



1.அடோப் (ADOBE): இந்த பெயர் ஒரு நதியின் பெயர். இந்த நிறுவனத்தைத் தொடங்கியவர்களின் ஒருவரான ஜான் வார்நாக் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் லாஸ் ஆல்டாஸ் என்ற பகுதியில் வசிக்கிறார். இவரின் வீட்டிற்குப் பின்புறம் இந்த அடோப் நதி ஓடுகிறது.

2. ஆப்பிள் (APPLE): ஆப்பிள் நிறுவனத்தின் முதல் இலச்சினை வாசகம் என்ன தெரியுமா! – "Bite into an Apple என்பதுதான். இதுதான் இந்நிறுவனத்தின் ஸ்லோகன் ஆக இருந்தது. ஆனால் இந்நிறுவனத்தின் மிகப் புகழ் பெற்ற ஸ்லோகன் "Think Different" என்பதே. எனவே இரண்டையும் கலந்து, வித்தியாசமான முறையில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஆப்பிள் நிறுவனத்தை நிறுவிய ஸ்டீவ் ஜாப்ஸ் அவரின் நிறுவனத்தை ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் என வைத்திருக்க வேண்டும். ஜாப்ஸ் மற்ற நண்பர்களுடன் சேர்ந்து ஆப்பிள்களை உற்பத்தி செய்திடும் பண்ணையில் முதலில் வேலை பார்த்து வந்தாராம். அவர் நண்பர்களுடன் தன் புதிய கம்ப்யூட்டர் கம்பெனிக்குச் சரியான பெயரை அவரின் நண்பர்கள் தரவில்லை என்றால் கம்பெனிக்கு ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் என்று பெயர் வைத்து விடுவேன் என்று செல்லமாகவும் வேடிக்கைக்காகவும் மிரட்டி உள்ளார். ஆனால் அவரின் நண்பர்களால் வேறு எந்த மிக நல்ல பெயரையும் கொடுக்காத நிலையில் ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் என்பதே பெயரானது. அதுவே சரித்திரத்திலும் நிலைத்துவிட்டது என்பது நாம் அறிந்த வரலாறு.

3. கூகுள் (GOOGLE):சர்ச் இஞ்சின் கொண்ட நிறுவனத்தை நிறுவிய போது, இதில் தேடப்படும் தகவல்களின் எண்ணிக்கை 1 போட்டு அதன் பின் 100 சைபர்கள் கொண்ட எண்ணாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் "Googol" என்ற சொல்லை முதலில் வைத்தனர். இந்த சொல் நம் ஊர் லட்சம், கோடி என்பது போல, மேலே சொன்ன எண்ணைக் குறிக்குமாம். ஆனால் இந்த சொல்லை எழுதுகையில் அதில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஏற்பட நமக்கு "Google" என்ற பெயர் கிடைத்தது. அது கூட இந்நிறுவனத்தை ஏற்படுத்தியவர்களால் ஏற்படுத்தப்பட வில்லை. ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தில் படித்த செர்ஜி பிரின் மற்றும் லாரி பேஜ் ஆகியோரால் தான் கூகுள் தொடங்கப்பட்டது. இவர்கள் இதனைத் தொடங்குவதற்கான ப்ராஜக்ட் ரிப்போர்ட்டினைத் தயாரித்து, ஒரு முதலீட்டாளரிடம் கொடுத்து நிதி உதவி கேட்டுள்ளனர். அவர் நிதி உதவி வழங்குகையில் தந்த செக்கில் "Google"" எனத் தவறாக எழுதப்போய், தானம் கொடுத்த மாட்டின் பல்லைப் பிடித்துப் பார்க்க வேண்டாம் என இருவரும் நினைத்து அந்த தவறான ஸ்பெல்லிங்குடனே நிறுவனத்தைத் தொடங்கி இன்று மனித இனத்தின் சிந்தனைப் போக்கினையே மாற்றிவிட்டனர்.

4.ஹாட் மெயில் (HOTMAIL) இந்த நிறுவனத்தைத் தொடங்கியவர் ஜாக் ஸ்மித். இணையம் வழியாக இமெயில்களைப் பெறும் வழி குறித்து முதலில் யோசித்துள்ளார். அதாவது இணைய இணைப்பு தரும் இன்டர்நெட் சர்வீஸ் புரவைடர் துணையின்றி, அவர்கள் சர்வரில் இடம் கேட்டு வாங்கி, இமெயில் பெறும் பழக்கத்தை மாற்றி வெப் சர்வரை அடைந்து மெயிலைப் பெறும் வழி குறித்துப் பல காலம் சிந்தித்து ஹாட்மெயிலை வடிவமைத்தார். ஹாட் மெயிலின் இன்னொரு நிறுவனரான, இந்தியரான, சபீர் பாட்டியா இதற்குப் பல பெயர்களை எழுதிப் பார்த்தார். எந்த பெயராக இருந்தாலும் அது மெயில் (MAIL)  என முடிய வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தார். இறுதியாக HOTMAIL என்ற பெயரே போதும் என முடிவுக்கு வந்தார். ஏனென்றால் இணையத்தில் வெப் பக்கங்களில் பயன்படுத்தப்படும் புரோகிராமிங் மொழியினை HTML Hyper Text Markup Language என அழைக்கிறோம். HOTMAIL  என்பதில் HTML இருப்பதால் அதுவே இருக்கட்டும் என முடிவு செய்து ஹாட் மெயில் என அழைத்தார். 1996 ஜூலை 4ல் இது அறிமுகம் செய்யப்பட்டது. முதலில் இது HoTMaiL என சின்ன எழுத்தும் குறிப்பிட்ட சில பெரிய எழுத்துமாக அமைக்கப்பட்டே பயன்படுத்தப்பட்டு வந்தது. பின் நாளில் இது வழக்கமாக எழுதும் முறையில் அமைக்கப்பட்டது.

5. இன்டெல் (INTEL): இந்த நிறுவனத்தை நிறுவியவர்கள் பாப் நாய்ஸ் மற்றும் கார்டன் மூர் (Bob Noyce and Gordon Moore)  என்பவர்களாவர். அவர்கள் தங்களின் புதிய நிறுவனத்தை "Moore Noyce" என அழைக்க முதலில் முடிவு செய்தனர். ஆனால் பின்னர் பார்க்கையில் இந்த பெயர் ஹோட்டல்கள் பல அடங்கிய ஒரு குரூப்பிற்கு இருப்பது தெரியவந்தது. அந்த பெயர் அந்த நிறுவனத்தால் பதியப்பட்டது தெரியவந்ததால் வேறு பெயரைச் சிந்திக்கத் தொடங்கினார்கள். அப்போது to ‘more noise’ என இருக்கட்டுமே என்று யோசித்தனர். ஆனால் ஒரு செமி கண்டக்டர் நிறுவனத்திற்கு இந்தப் பெயர் தவறான பொருளைத் தரும் என தவிர்த்துவிட்டனர். பின் முதல் ஓராண்டிற்கு NM Electronics என்ற பெயரைப் பயன்படுத்தினர். அதன் பின் INTegrated Electronics என்ற பெயரைச் சுருக்கி NTEL எனப் பெயர் வைத்தனர். அப்படியே அந்தப் பெயர் இன்றளவும் உலகில் புகழ் பெற்ற ஒரு பெயராக இருந்து வருகிறது.

6. மைக்ரோசாப்ட் (MICROSOFT): பில் கேட்ஸின் இந்த நிறுவனம் மைக்ரோசாப்ட் எனப் பெயர் பெற்ற நிகழ்ச்சி மிகச் சாதாரணமான ஒன்றாகும். Microcomputer மற்றும் Software  என்ற இரண்டையும் இணைத்து இந்த பெயர் உருவாக்கப்பட்டது. முதலில் பில் கேட்ஸ் தன் சகா பால் ஆலன் என்பவருக்கு 1975 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29ல் எழுதிய கடிதத்தில் MicroSoft  எனப் பிரித்து இடைக் கோடிட்டு எழுதினாராம். அதன் பின் இருவரும் சேர்ந்து தங்கள் நிறுவனத்திற்கு இன்றைய பெயரை 1976 நவம்பர் 26ல் பதிவு செய்திருக்கின்றனர். இடையே இருந்த இடைக்கோடு காலப்போக்கில் நீக்கப்பட்டு MICROSOFT என ஒரே பெயராகப் பின்னர் உருவானது. அதுவே உலக மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட நிறுவனத்தின் பெயராக அமைந்தது.

7. யாஹூ (YAHOO): தொடக் கத்தில் இந்த நிறுவனத்தின் பெயர் "Jerry and David’s Guide to the World Wide Web" என்பதாக இருந்தது. 1994ல் யாஹூ என்ற பெயருக்கு மாறியது. ஜொனதன் ஸ்விப்ட் என்பவர் எழுதிய கல்லிவரின் பயணங்கள் என்ற நாவலில் "Yet Another Hierarchical Officious Oracle" என்ற சொல் தொடரின் சுருக்கமாக YAHOO  என்பதைப் பயன்படுத்தினார். இந்த பெயர் மிக முரட்டுத்தனமான, நாகரிகம் மற்றும் பண்பாடு தெரியாத இளைஞனைக் குறிக்கும். யாஹூ நிறுவனத்தைத் தொடங்கிய ஜெர்ரியங் மற்றும்டேவிட் பைலோ ஆகிய இருவரும் தாங்கள் அப்படிப்பட்ட இளைஞர்கள் என்று தங்களைத் தாங்களே வேடிக்கையாகக் குறிப்பிட்டுக் கொண்டு இந்த பெயரையே தங்கள் நிறுவனத்திற்கும் தேர்ந்தெடுத்தனர்.

சேவை நிறுவன பெண் ஊழியர்கள் இனிக்க பேசி, தொந்தரவு : மொபைல் சந்தாதாரர்கள் அதிருப்தி

0 comments
"டெலி மார்க்கெட்டிங் சர்வீஸ்' மற்றும் "வாடிக்கையாளர் சேவை' என்ற பெயரில், மொபைல் போன் சந்தாதாரர்களை தொடர்பு கொண்டு தொந்தரவு செய்வது கோவை, திருப்பூரில் அதிகரித்துள்ளது. இதற்கு துணைபோகும், தனியார் மொபைல் போன் நிறுவனங்கள் மீது, தொலை தொடர்பு ஆணையம் (டிராய்) கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என வாடிக் கையாளர்கள் வலியுறுத்துகின்றனர்.


தனியார் மொபைல் போன் நிறுவனங்களின் சந்தாதாரர்களை போனில் தொடர்பு கொள்ளும் டெலி மார்க்கெட் டிங், சேவை நிறுவனங்களைச் சேர்ந்த பெண் ஊழியர்கள் இனிமையான குரலில் கிரெடிட் கார்டு, இன்சூரன்ஸ், வங் கிக் கடன் உள்ளிட்ட தேவை களை பூர்த்தி செய்து தருவதாக நயமாக பேசுகின்றனர். இது போன்ற தொந்தரவு "கால்'களை பெரும்பாலான சந்தாதாரர்கள் விரும் புவதில்லை. இவர்களது இடைவிடாத தொல்லையால், அலுவலக வேலையில் இருப் போர், வாகனம் ஓட்டுவோர் "டென்ஷனுக்கு' உள்ளாகின்றனர். "ஏதாவது அவசர அழைப்பாக இருக் குமோ' என நினைத்து அழைப்பை ஏற்றால், மறுமுனையில் பெண் ஊழியர் பேச ஆரம் பித்து விடுகிறார். அழைப்பை ஏற்ற நபர் எந்தச் சூழ்நிலையில் உள்ளார், என்பதை பற்றி அவர் சிறிதும் கவனத்தில் கொள்வதில்லை. இவ்வாறு, மொபைல் போன் சந்தாதாரர்களை "சேவை நிறுவனங்கள்' என்ற பெயரில் தொடர்பு கொண்டு தொந்தரவு செய்ய, தனியார் மொபைல் போன் சேவை (ஆபரேட்டர்கள்)நிறுவனங்களும் உடந்தையாக இருக் கின்றன. இத்தகைய மொபைல் போன் சேவை நிறுவனங்கள், தங்களது சந்தாதாரர்களின் முகவரி மற்றும் மொபைல் எண்களை, தனி நபர் நடத்தும் டெலிமார்க் கெட்டிங் சர்வீஸ் மற்றும் பிற சேவை நிறுவனங்களுக்கு "மத்திய தொலை தொடர்பு ஆணையத்தின்' (டிராய்) விதிகளை மீறி எப்படி வழங்குகின்றன? என்ற கேள்வி எழுந் துள்ளது.


டெலிமார்க்கெட்டிங் நிறுவனங் கள் மட்டுமின்றி, சில மொபைல் போன் சேவை நிறுவனங்களும் புதிது, புதிதாக சேவைகளை துவக்கி, வாடிக்கையாளர்களின் விருப் பத்தை கோராமலே பல வசதிகளை அளித்து விடுகின்றன. மிஸ்டு கால் அலர்ட், நியூஸ் அலர்ட், ஜோக் அலர்ட் என பலவித சேவைகளை தாங்களாகவே அளித்துவிட்டு, சந்தாதாரர்களின் கட்டணத்தில் தொகையை ஏற்றி விடுகின்றனர்; இதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாராவது கேள்வி எழுப்பினால் மட்டுமே அந்த சேவையை ரத்து செய்து ஒதுங்கிக் கொள்கின்றனர். இவை தவிர, மேலும் பல தொந்தரவுகளையும் சந்தாதாரர்கள் அனுபவித்து வருகின்றனர். சமீப காலமாக 13 இலக்கம் கொண்ட எண்களிலிருந்து "ஹலோ டியர், ஹாய் டியர்' என்ற எஸ்.எம்.எஸ்., தகவல்கள் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப் பட்டு வருகின்றன. இதை பார்த்ததும், சில வாடிக்கையாளர்கள் பதில் மெசேஜ் அனுப்பும் போது, அதற்கு ஒரு ரூபாய் கட்டணத்தை "பில்' தொகையில் சேர்த்துவிடுகின்றனர்.


மொபைல் போன்களில் "வாடிக்கையாளர் சேவை' என்ற பெயரில் கட்டணச் சுரண்டலில் ஈடுபடுவதாக தனியார் மொபைல் போன் நிறுவனங்கள் மீது அதிகளவில் புகார் எழுந்துள்ளது. மேலும், தனியார் மொபைல் போன் சேவை நிறுவனங்கள், தங்களது "மதிப்பு கூட்டு சேவை' பற்றி முன்பே பதிவு செய்யப்பட்ட தகவலை, வாடிக்கையாளர்களுக்கு தானியங்கி வாய்ஸ் சேவை மூலம் அளிக்கின்றனர். இந்த அழைப்பை ஏற்கும் வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தி அடைகின்றனர். காரணம், வாகனம் ஓட்டும் போது, அலுவலக பணியில் இருக்கும் போது என, கண்ட நேரத்தில் எல்லாம், ஏன் இரவு 10.00 மணிக்கு மேல் கூட, அழைப்பு வருகிறது. இது போன்ற விதிமீறல் தொந்தரவுகளை தொலை தொடர்பு ஆணையம் வரைமுறைப்படுத்திட வேண்டும் என, மொபைல் போன் வாடிக்கை யாளர்கள் வலியுறுத்துகின்றனர்.


இது குறித்து, தனியார் மொபைல் போன் வாடிக்கையாளர்கள் கூறியதாவது: மாதம் தோறும் பிரீ பெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு திட்டங்களில் வாடிக்கையாளரிடம் கட்டணம் வசூலிப்பதில் மட் டுமே, தனியார் மொபைல் போன் சேவை நிறுவனங்கள் மிகுந்த அக்கறை காட்டுகின்றன. அதே வேளையில், வாடிக் கையா ளர்களின் குறைகளுக்கு தீர்வு காண்பதிலோ அல் லது அவசியமற்ற விளம் பர சேவை கால்களை தடை செய்வதிலோ அக்கறை காட்டுவதில்லை. இப்படியொரு சேவை எமக்கு வேண்டாம் என, சேவை பிரிவில் புகார் தெரிவித்தாலும் ரத்து செய்ய மறுக்கின்றனர். வாடிக்கையாளர்களுக்கான சேவையை அதிகரித்திருப்பது தொடர்பான தகவல்களை எஸ்.எம்.எஸ்., சாக அனுப்ப ஆட்சேபணை இல்லை. அதே வேளையில், "ரெக்கார் டேட் வாய்ஸ்'சில் கால் செய்து, தகவல்களை மணிக்கணக்கில் கூறும் போது, அவற்றை கேட்க நேரமிருப்பதில்லை. மேலும், டெலிமார்க்கெட் டிங் உள்ளிட்ட தனியாரின் விளம்பர நோக்கத்துக்கு தீனி போடுவதை, மொபைல் போன் சேவை நிறுவனங்கள் முற்றிலுமாக நிறுத்திக்கொள்ள வேண்டும். வாடிக்கையாளர்களின் போன் எண்களை, தனி நபர்களுக்கோ, நிறுவனங்களுக்கோ வழங்கி, வீண் தொந்தரவுக்கு துணைபோவதை கைவிட வேண்டும். இவ்வாறு, வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர்.


வாடிக்கையாளர்களின் அதிருப்தி குறித்து, தனியார் மொபைல் போன் சேவை நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: வாடிக்கையாளர்களின் மொபைல் போன் எண்கள், முகவரிகளை சம்மந்தமில்லாத தனி நபர்கள், நிறுவனங்களுக்கு அளிப்பதில்லை. குற்ற வழக்குகளில் புலன்விசாரணைக்கு அவசியம் என போலீசார் கோரும் போது, உரிய கடிதம் பெற்று அதன் பிறகே அளிக்கிறோம்; அதற்கும், பல வித கெடுபிடிகளை கையாளுகிறோம். வாடிக் கையாளர்களின் நலனை பாதிக்கும் செயலுக்கு நாங்கள் துணைபோவதில்லை. இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார்
 
 

Related Posts with Thumbnails