Wednesday, November 25, 2009

வியக்க வைக்கும் ஒரு செய்தி

0 comments
இக் காணொளியை  காணவும்



எஸ்எம்ஸ்-100 மடங்கு கட்டணம் வசூலிக்கும் நிறுவனங்கள்!

1 comments

எஸ்எம்எஸ் ரேட்டா அடியோடு குறைக்க தொலைத்தொடர்பு ஆணையம் ட்ராய் முடிவு செய்துள்ளது.

எஸ்எம்எஸ் எனப்படும் குறுந்தகவல் சேவைக்கு பல்வேறு மொபைல் சர்வீஸ் நிறுவனங்களும் கணிசமான கட்டணம் வசூலித்து வருகின்றன.

பல மொபைல் சர்வீஸ் நிறுவனங்கள், கால் சார்ஜைவிட அதிகமாக எஸ்எம்எஸ் கட்டணம் வசூலித்து வருகின்றன.

ஒரு எஸ்எம்எஸ்ஸுக்கு 50 காசு முதல் 1 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. அதற்கும் ரேட் கட்டர் எனும் பெயரில் ஒரு தொகையை வசூலிக்கிறார்கள் (கட்டண குறைப்புக்காக). ஆனால் இதன்படிதான் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்று சோதித்துப் பார்க்கும் பொறுமையோ, நேரமோ யாருக்கும் இல்லை என்பதால் மொபைல் நிறுவனங்கள் காட்டில் வசூல் மழை.

உண்மையில் ஒரு எஸ்எம்எஸ்ஸின் விலை ஒரு பைசா அல்லது அதில் 10-ல் ஒரு பகுதிதானாம். காரணம் ஒரு குறுந்தகவலுக்கு அதிகபட்சம் 1 KB க்கும் குறைவான இடத்தையே எடுத்துக் கொள்கிறது. ஒரு KB-க்கு ஒரு பைசாதான் கட்டணம் எனும்போது, அதைவிட குறைவான இடமே தேவைப்படும் எஸ்எம்எஸ்ஸுக்கு ஒரு பைசாவுக்கும் குறைவாகத்தானே கட்டணம் வசூலிக்க வேண்டும்?

இதை வைத்துப் பார்க்கையில் குறைந்தது 40 முதல் 100 மடங்கு வரை ஒரு எஸ்எம்எஸ்ஸுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பத்திரிகைகள் ஆதாரங்களுடன் செய்திகள் வெளியிட்டு வருகின்றன.

இதனால் எஸ்எம்எஸ் கட்டணங்களை குறைத்தே தீர வேண்டிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது ட்ராய். விரைவி்ல் ஒரு எஸ்எம்எஸ் 1 பைசா அல்லது, குறிப்பிட்ட கட்டணத்துக்கு வாழ்நாள் முழுவதும் எஸ்எம்எஸ் வசதி என்ற அறிவிப்பு வரும் எனத் தெரிகிறது.

இன்னும் ஓரிரு தினங்களில் இந்த அறிவிப்பு வரும் என எதிர்பர்க்கப்படுகிறது .

இன்போஸிஸ் பிபிஓ சிஇஓ விலகல்!

0 comments



இன்போஸிஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் அவுட்சோர்ஸிங் பிரிவு தலைமை நிர்வாகி அமிதாப் சௌத்ரி அந்நிறுவனத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த மார்ச் 2006-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார் அமிதாப் சௌத்ரி. இன்போஸிஸ் நிறுவனத்தின் பிபிஓ பிரிவுக்கு தலைமை செயல் அலுவலராக அவர் பொறுப்பேற்றார்.

திடீரென்று இப்போது அவர் ராஜினாமா செய்துள்ளார். இதற்கு காரணம் என்னவென்று அவர் தெரிவிக்கவில்லை.

இன்போஸிஸ் பிபிஓ முழுக்க முழுக்க இன்போஸிஸ் நிறுவனத்துக்கு சொந்தமானதாகும். நாட்டிலேயே இரண்டாவது பெரிய பிபிஓ யூனிட் இதுதான்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 26 சதவிகிதம் இதன் வருவாய் உயர்ந்திருந்தது. அமெரிக்காவின் மெக்காமிஷ் சிஸ்டம் நிறுவனத்தை சமீபத்தில்தான் இன்போஸிஸ் பிபிஓ வாங்கியது.

அனுமதி இல்லாமலேயே யார் இ&மெயிலையும் போலீஸ் பார்க்கலாம் - ஐ.டி. சட்டத்தில் திருத்தம்

0 comments



சைபர் கிரைம் எனப்படும் இணையதளக் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனால், பல வழக்குகளில் புலன் விசாரணைக்கு இணைய தள பயன்பாடு, இமெயில் கடிதங்கள் முக்கிய ஆதாரமாக விளங்குகின்றன. இந்நிலையில், விசாரணையின்போது ஒருவரது இமெயிலை பின்தொடரவும், திறந்து படிக்கவும் மத்திய உள்துறையிடம் போலீசார் அனுமதி பெற வேண்டியுள்ளது. அதனால், விசாரணையில் தாமதம் ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன.

இதற்காக தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படுகிறது. இதற்கான அனுமதியை நாடாளுமன்றம் சமீபத்தில் அளித்தது. சட்டத் திருத்தம் அமலுக்கு வந்ததும், வழக்குக்குத் தொடர்புடைய யாருடைய இமெயிலையும் மாநில உள்துறை அனுமதி பெற்று படிக்கும் அதிகாரம் போலீஸ் ஐஜிக்கு கிடைத்து விடும்.

எனினும், யாருடைய இமெயில் கண்காணிக்க வேண்டியுள்ளது என்பதை பணி தொடங்கிய 3 நாட்களுக்குள் மாநில உள்துறையின் செயலருக்கு போலீஸ் ஐஜி தெரிவிக்க வேண்டும். மாநில உள்துறை செயலரே அதற்கான அனுமதியை அளிக்க முடியும். அனுமதியை போலீசார் தவறாக பயன்படுத்துவதைத் தடுக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.

Related Posts with Thumbnails