Tuesday, November 10, 2009

இந்தியாவில் 8000 பேரை பணியமர்த்தும் அக்சென்சர்!

0 comments
அக்சென்சர் மற்றும் குளோபல் டெக்னாலஜி இணைந்து இந்தியாவில் மட்டும் 8000 புதிய பணியாளர்களை வேலைக்கு அமர்த்த உள்ளதாக அறிவித்துள்ளன.


இந்தியாவில் இந்த நிறுவனங்களின் பணியாளர் எண்ணிக்கை 42000 ஆக உள்ளது. இந்த புதிய பணியாளர்களையும் சேர்த்து 50000 பேராக தங்கள் தொழிலாளர் பலத்தை உயர்த்த முடிவு செய்துள்ளதாக அக்சென்சர் தலைவர் வில்லியம் டி கிரீன் தெரிவித்துள்ளார்.

வில்லியம் கிரீன் மேலும் கூறுகையில், "உலகம் மெல்ல மெல்ல சரிவிலிருந்து மீளத் துவங்கிவிட்டதன் அறிகுறிகள் தெரிகின்றன. குறிப்பாக இந்தியாவில் நிலைமைகள் மிகவும் சாதகமாக உள்ளன. எனவே இந்தியாவில் மட்டும் 8000 புதிய பணியாளர்களை பணி நியமனம் செய்யும் பணி விரைவில் துவங்க உள்ளது. அனலிடிக்ஸ் பிரிவில் இந்த பணியாளர்களை ஈடுபடுத்தப் போகிறோம். இந்தியாவில் இந்த பணிக்கு பெரிய அளவில் ஸ்கோப் இருக்கிறது.." என்றார்.

அக்சென்சரின் நடப்பு ஆண்டு வருவாய் 21.58 பில்லியன் டாலர்கள். இந்த ஆண்டு மருந்துகள் உற்பத்தி மற்றும் தொலைபேசித் துறை வாடிக்கையாளர்களை அதிகரிக்கும் முயற்சியில் உள்ளது அக்சென்சர்.

FREE LAPTOP PLAN Join http://ezlaptop.com/?r=904180

பொறியியல் பட்டதாரிகள் 75% பேர் தகுதி குறைவு்

0 comments
பொறியியல் பட்டதாரிகளில் 75 சதவீதம் பேருக்கு வேலைக்கான தகுதியில்லை என்று தொழில் துறை அமைப்பான நாஸ்காம் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்திய தொழில் மற்றும் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு (பிக்கி) சார்பில் இந்திய உயர் கல்வி குறித்த 6வது உச்சி மாநாடு டெல்லியில் நடந்தது. அதில் இடம்பெற்ற குழு விவாதத்தில் வெளியான தகவல்களை அசோசேம் அமைப்பு, அறிக்கையாக வெளியிட்டது. நிகழ்ச்சியில் புனே பொறியியல் கல்லூரியின் இயக்குனர் சகஸ்ரபாது கூறுகையில், பொறியியல் பட்டதாரிகளுக்கு எளிதில் வேலை கிடைக்காததற்கு காரணம், படிப்பை முடித்து வெளிவரும்போது வேலைக்கான தகுதியோ, முன்அறிவோ இல்லாததே. இது முன்னணி கல்லூரிகளில் பட்டம் பெற்றவர்களுக்கும் பொருந்தும் என்றார். நம்நாட்டின் பெரும்பாலான கல்லூரிகளின் கல்வித் திட்டமே பாட அடிப்படையிலானது. தொழிற் பயிற்சி, நேரடி அனுபவம் கிடையாது என்பதே காரணம் என்றார் அவர்.

FREE LAPTOP PLAN Join http://ezlaptop.com/?r=904180  

Related Posts with Thumbnails