Thursday, November 5, 2009

நோக்கியா, சீமென்ஸில் 5,000 பணியாளர் குறைப்பு!

0 comments

முன்னணி மொபைல் தயாரிப்பு நிறுவனங்களான நோக்கியா மற்றும் சீமென்ஸில் 5,000 பணியாளர்கள் குறைக்கப்படுகின்றனர்.

இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக இந்நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு இதுகுறித்த நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது.

நோக்கியா - சீமென்ஸ் நெட்வார்க்கில் உலகம் முழுக்க 64000 பணியாளர்கள் உள்ளதாகவும், இவர்களில் 7 முதல் 8 சதவிகித ஊழியர்கள் நீக்கப்படுவது தவிர்க்க முடியாதது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மார்க்கெட் நிலையில் சற்று முன்னேற்றம் தெரிந்தாலும், செலவுக் குறைப்பு செய்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் இந்த முடிவை மேற்கொண்டதாக நோக்கியா அறிவித்துள்ளது.

வரும் 2011-ம் ஆண்டுக்குள் 500 மில்லியன் யூரோ அளவுக்கு செலவுக் குறைப்பு செய்ய வேண்டியுள்ளதாம் இந்த நிறுவனங்கள். இந்த ஆண்டு 550 யூரோ அளவுக்கு செலவுக் குறைப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனவாம்.

ஐ.டி., பிபிஓ நிறுவனங்களில் சம்பளம் 16% வரை குறைப்பு

0 comments
சர்வதேச நிதி நெருக்கடியால் ஐ.டி., அவுட்சோர்சிங் நிறுவன ஆர்டர்கள் சரிந்துள்ள நிலையில், முன் அனுபவம் இல்லாத ஊழியர்கள் சம்பளத்தை நிறுவனங்கள் 16 சதவீதம் வரை குறைத்து விட்டன. சர்வதேச நிதி நெருக்கடியால் இந்தியாவின் ஆர்டர்கள் குறைந்து ஐ.டி., பிபிஓ நிறுவனங்களின் லாபம் பாதித்தது. இப்போது நிலைமை சீராகி வந்த போதிலும், புதிதாக பணியில் சேர்க்கப்படும் அனுபவமற்ற பட்டதாரிகளுக்கு முன்பு வழங்கப்பட்ட சம்பளம் இப்போது அளிக்கப்படுவதில்லை. ஆண்டுதோறும் சுமார் 3 லட்சம் கம்ப்யூட்டர் சயின்ஸ், பொறியியல் பட்டதாரிகள், படிப்பை முடித்து வெளியே வருகின்றனர். டிசிஎஸ், இன்போசிஸ் உட்பட நூற்றுக்கணக்கான ஐ.டி., சேவைத் துறையில் வேலைக்காக விண்ணப்பிக்கின்றனர். ஐ.டி. நிறுவனங்களின் நிலைமை ஓராண்டுக்கு முன்பு இருந்ததைப் போல இல்லாததால், பாதிக்கு மேற்பட்டோருக்கு வேலை கிடைப்பதில்லை. படிப்பை முடித்து புதிதாக வேலை தேடுவோரின் சம்பளம் 10 முதல் 16 சதவீதம் வரை குறைந்து விட்டது.

போன் எண்ணிக்கை 50 கோடியாக உயர்வு

0 comments
நம்நாட்டில் போன் வைத்திருப்போர் எண்ணிக்கை 50 கோடியைத் தாண்டியுள்ளது. இதன்மூலம், அடுத்த ஆண்டு இறுதிக்கான இலக்கு 15 மாதங்கள் முன்னதாகவே எட்டப்பட்டுள்ளது. செல்போன், லேண்ட்லைன் உட்பட அனைத்து வகை போன் இணைப்புகளின் எண்ணிக்கை அடுத்த ஆண்டு இறுதிக்குள் 50 கோடியாக அதிகரிக்கும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், செப்டம்பர் 30ம் தேதியே இந்த இலக்கு எட்டப்பட்டு விட்டதாக தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது. இது 15 மாதங்கள் முன்னதாக நடந்துள்ள சாதனை. ஆகஸ்ட் 31ம் தேதி நிலவரப்படி நம்நாட்டில் போன் வைத்திருப்போர் எண்ணிக்கை 49 கோடியே 40 லட்சமாக இருந்தது. இது செப்டம்பர் 30ம் தேதி வரை 50 கோடியே 90 லட்சமாக அதிகரித்தது. இது 3.03 சதவீத உயர்வு. அதன்மூலம், இப்போது 50 கோடிக்கு மேற்பட்டோரிடம் போன் உள்ளது. நாட்டின் 120 கோடி மக்கள்தொகையுடன் ஒப்பிடுகையில், 100 பேருக்கு 43 பேரிடம் இப்போது போன் உள்ளது. அதில் 40 பேரிடம் செல்போன் இருக்கிறது. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் செல்போன் நிறுவனங்கள் 1.51 கோடி புதிய இணைப்புகளை அளித்துள்ளன. அதிக செல்போன் எண்ணிக்கையில் உலகிலேயே சீனாவுக்கு அடுத்ததாக இந்தியா 2வது இடம் வகிக்கிறது. சீனாவில் 60 கோடி பேருக்கு மேல் போன் இணைப்பு வைத்துள்ளனர். விநாடி அடிப்படையில் கட்டணத்தை பெரும்பாலான நிறுவனங்கள் இப்போது அறிவித்துள்ளதால் போன் இணைப்பு எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts with Thumbnails