Thursday, November 12, 2009

உலக வங்கித் தலைவர் எச்சரிக்கை கிரடிட், டெபிட் கார்டால் வங்கிகளுக்கு சிக்கல்

0 comments

இந்த ஆண்டில் புதிதாக எந்த பொருளாதாரச் சிக்கலும் ஏற்படாது. ஆனால் 2010ம் ஆண்டில் வங்கிகள் புதிய சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம். பெரும் வேலை இல்லாத் திண்டாட்டம் வங்கிகளை பாதிக்கக்கூடும். அத்துடன் கிரெடிட் கார்டுகள், டெபிட் கார்டுகள், நுகர்வுக் கடன்கள் மூலம் வங்கிகளுக்கு பிரச்சினை வரலாம் என உலக வங்கித் தலைவர் ராபர்ட் ஜோலிக் கூறினார். சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் ராபர்ட் ஜோலிக் கலந்து கொண்டார். மாநாட்டு அரங்கில் செய்தியாளர்களுடன் பேசிய போது, 2010ல் ஆண்டில் வங்கிகள் எதிர் கொள்ளக்கூடிய சிக்கல்கள் பற்றிக் குறிப்பிட்டார். அவர் கூறியதாவது: இதுவரை, உலக நாடுகளின் வளர்ச்சிக்கு அமெரிக்க பொருளாதாரம் உதவியாக இருந்திருக்கிறது.

அமெரிக்காவின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உலக நாடுகள் ஏற்றுமதி செய்தன. இனி அத்தகைய நிலை இராது. அமெரிக்காவின் தேவைகள் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாக இருக்காது. உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியின் பொழுது இந்த மாற்றத்தை வெற்றிகரமாக சமாளித்தாக வேண்டும். உலக நாடுகள் அனைத்தும் பொருளாதாரத் தேக்க நிலையில் இருந்து ஒரே நேரத்தில் விடுபட முடியாது. நாட்டுக்கு நாடு காலம், நேரம், முறை முதலியன மாறுபடக்கூடும். அதனால் உலக நாடுகள் ஒன்றுடன் ஒன்று ஒத்துழைத்தால் சிக்கல்கள் குறையும். தேக்க நிலையில் இருந்து விடுபட புதிய ஊக்குவிப்புச் சலுகைகள் தேவை இல்லை. 2010ம் ஆண்டிலும் சலுகைகள் தொடரலாம் என்றார்.

ஆன்லைன் மூலம் சாஃப்ட்வேர் தீர்வு: மைக்ரோசாஃப்ட் அறிமுகம்

0 comments
சிறிய, நடுத்தர வணிக நிறுவனங்களுக்கு ஆன்லைன் மூலம் சாஃப்ட்வேர் தீர்வுகளை அளிக்கும் புதிய முறையை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

  இதன்படி மாதம் ரூ. 95 கட்டணத்தில் மின்னஞ்சல், இணையதள ஒருங்கிணைப்பு, மின்வழிச் சந்திப்பு சார்ந்த மென்பொருள் சேவைகளை இந்நிறுவனம் அளிக்கிறது. இந்நிறுவனத்தின் இணையதளத்திற்குள் சென்று பயன்பாட்டுக்கு ஏற்ற கட்டணத்தைச் செலுத்தி இச்சேவையைப் பெறலாம். ஹெச்சிஎல், இன்ஃபோசிஸ்டம்ஸ், இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ ஆகிய நிறுவனங்களுடன் இதற்காக மைக்ரோசாஃப்ட் உடன்பாடு செய்துள்ளது.

  சோதனை அடிப்படையில் இந்த சேவை கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. இதை பல நிறுவனங்கள் பயன்படுத்திப் பார்த்து அதில் நல்ல பலன் கிடைத்துள்ளதைத் தெரிவித்ததைத் தொடர்ந்து இம்மாதம் 7-ம் தேதி முதல் முழு வீச்சில் இந்த சேவையை அறிமுகப்படுத்துவதாக மைக்ரோசாஃப்ட் கிளவுட் கம்ப்யூட்டிங் பிரிவின் செயல்முறை மேலாளர் சாஜு குட்டி தெரிவித்துள்ளார். 
 
இணையதள முகவரி: www.microsoft.com/india/onlineservices

ரூ.3,000க்கு கம்ப்யூட்டர் நிவியோ திட்டம்

0 comments
ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து ரூ.3,000 விலையில் கம்ப்யூட்டர் விற்பனையை இந்த மாதம் தொடங்க நிவியோ திட்டமிட்டுள்ளது.

"டெஸ்க்டாப் கம்ப்யூட்டரை ரூ.3,000க்கு விற்பனை செய்ய ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்துள்ளோம்" என நிவியோ தலைவர் சச்சின் துகல் கூறினார். ஏற்கனவே, மைக்ரோசாப்ட்,  ஏர்டெல் நிறுவனங்களுடன் இணைந்து ஆன்லைன் பிசி வசதியை நிவியோ அளிக்கவுள்ளது.

நிவியோ கம்பேனியன் என்ற கருவியை ரூ.4,999ல் அது அறிமுகம் செய்தது.

Related Posts with Thumbnails