Wednesday, November 4, 2009

வெப் முகவரிகளுக்கு பெரும் பஞ்சம் வரும்- ஐரோப்பிய ஆணையம் எச்சரிக்கை

0 comments

புதிய தலைமுறை வெப் முகவரிகளுக்கு உலக நாடுகள் மாறா விட்டால் அடுத்த ஆண்டு வெப் முகவரிகளுக்கு பெரும் பஞ்சம் ஏற்படும் என ஐரோப்பிய ஆணையம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து ஐரோப்பிய கமிஷன் கூறுகையில், இன்டர்நெட் புரோட்டோகால் வெர்சன் 6 அல்லது ஐபிவி6 (IPv6) தொழில்நுட்பத்துக்கு மாற வேண்டிய அவசரம், அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஏராளமான வெப் முகவரிகளை உருவாக்க முடியும்.

ஐபிவி6 தயாராகி பத்து வருடங்களாகி விட்டது. இதன் மூலம் 340 டிரில்லியன் வெப் முகவரிகளைத் தர முடியும். ஆனால் தற்போது உள்ள ஐபிவி4 தொழில்நுட்பத்திலிருந்து, ஐபிவி6க்கு மாற வெகு சில வர்த்தக நிறுவனங்களே தயாராக உள்ளன.

ஆனால் புதிய தொழில்நுட்பத்துக்கு விரைவில் வர்த்தக நிறுவனங்கள் மாறுவது அவசியம், அவசரம். இல்லாவிட்டால் அடுத்த ஆண்டு வெப் முகவரிகளை ஒதுக்க முடியாமல் திணறும் நிலை ஏற்படும் என்று அது எச்சரித்துள்ளது.

ஒவ்வொரு இணையதளத்துக்கும் ஐபி முகவரி உண்டு. இது எண்களால் குறிப்பிடப்படப்படுகிறது. (உ.ம்) - 192.168.1.1. ஐபி முகவரி கொடுக்கப்பட்ட பின்னர் அனைவருக்கும் எளிதில் புரியும் வகையில், நினைவில் கொள்ளும் வகையில் வேறு பெயர்கள் சூட்டப்படுகின்றன. (உ.ம்) தட்ஸ்தமிழ்.ஒன்இந்தியா.இன்.

தற்போது நடைமுறையில் உள்ள ஐபிவி4 தொழில்நுட்பம், 32 பிட் முகவரிகளைக் கொண்டதாக உள்ளது. இதன் மூலம் 4.3 பில்லியன் வெப் முகவரிகளை கையாள முடியும். ஆனால் ஐபிவி 6 தொழில்நுட்பம் 128 பிட் கொண்டதாகும். இதன் மூலம் பல பில்லியன் புதிய வெப் முகவரிகளை உருவாக்க முடியும்.

ஐபிவி6 தொழில்நுட்பம் குறித்து ஐரோப்பா, மேற்கு ஆசியா, ஆசியாவைச் சேர்ந்த 610 அரசு, கல்வி மற்றும் பிற வர்த்தக நிறுவனங்களிடம் கருத்து அறியப்பட்டது. இதில் வெறும் 17 சதவீதம் பேர்தான் ஐபிவி6க்கு ஆதரவாக கருத்தளித்துள்ளனர் என்கிறது ஐரோப்பிய ஆணையம்.

இன்டர்நெட்டின் வளர்ச்சிக்கும், ஸ்திரத்தன்மைக்கும் புதிய தொழில்நுட்பத்திற்கு மெதுவாக மாறி விடுவதுதான் நல்லது என்கிறது இந்த ஆணையம்.

இதுகுறித்து ஆணையத்தின் தகவல் தொடர்பு செயலாளர் டெட்லெப் எக்கெர்ட் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளில் சமூக, பொருளாதார துறைகளில் இன்டர்நெட் தவிர்க்க முடியாத ஒரு அம்சமாகி விட்டது. விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.

எனவே ஐபிவி6 தொழில்நுட்பத்திற்கு மாறுவதே அனைவருக்கும் நல்லது, குறிப்பாக இன்டர்நெட்டுக்கு நல்லது என்றார்.

விவரமாய் பேசும் சாந்தனு ; விழி பிதுங்கிய பாக்யராஜ்

0 comments
சித்து பிளஸ் 2 பர்ஸ்ட் அட்டம்ப்ட் - இது பாக்யராஜ் இயக்கத்தில் அவரது மகன் சாந்தனு நாயகனாக நடித்திருக்கும் படம். படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக சாந்தினி என்ற கல்லூரி மாணவி நடித்திருக்கிறார். இப்படம் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில், சூட்டிங் ஸ்பாட்டில் சாந்தனுவால் தான் விழிபிதுங்கிய கதையை தனக்கே உரிய பாணியில் சுவாரஸ்யமாக பகிர்ந்து கொண்டார். சாந்தனுவோ விவரமாய்‌ பேசி ஆச்சர்யப்படுத்தினார். பாக்யராஜ் பேசுகையில், நான் அமிதாப்பச்சனையே வச்சு படம் எடுத்திட்டேன். ஆனால், இவனை வைச்சு எடுக்கறதுக்குள்ளே ஒரு வழியாகிட்டேன். எல்லாத்துலேயும் தலையிடுறான். கம்போசிங்கில் உட்கார்ந்தா அங்க ஒரு கரெக்ஷன். டயலாக் சொல்லிக் கொடுத்தா அதிலே இன்னும் ரெண்டு வரி சேர்த்து சொல்றான். கேமிராவை இங்க வக்கலாம்னு சொன்னா, இது வேணாம். அங்க வையுங்கிறான். சொந்த புள்ளைய வச்சு படம் எடுக்கறது பயங்கர கஷ்டம்ப்பா என்றார். அப்போது குறுக்கிட்ட சாந்தனு, யூத்துங்க சைக்காலஜி எனக்குதானே தெரியும்? அதைதான் நான் சொன்னேன். நான் சொன்ன கரெக்ஷனை யூனிட்ல இருக்கிறவங்களே ரசிச்சாங்க தெரியுமா? என்று சொன்னதுடன், அப்பா படம்ங்கிறதாலதான் நான் தலையிட்டேன். இதுவே வேற டைரக்டர்னா அவரு என்ன சொல்றாரோ, அதான். அப்படியே நடிச்சு கொடுத்திருவேன், என்றும் விவரமாய் பேசினார்.

Related Posts with Thumbnails