Thursday, November 26, 2009

3 ஜி போனுக்கு சென்னை மக்களிடம் அமோக வரவேற்பு!

1 comments

பிஎஸ்என்எல்லின் சென்னை தொலைபேசி சமீபத்தில் அறிமுகப்படுத்திய 3 ஜி போனுக்கு சென்னைவாசிகளிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பிஎஸ்என்எல்லின் வாடிக்கையாளர் சேவை பற்றி எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும், இந்த புதிய தலைமுறை தொழில்நுட்பத்தில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி பேசும் வசதியை விரும்பு அந்த இணைப்பைப் பெறுகின்றனர் வாடிக்கையாளர்கள்.

இன்டர்நெட், சினிமா பார்த்தல், டி.வி. சேனல்கள் பார்த்தல் என சகல வசதிகளும் நிறைந்த சேவை இது. குறிப்பாக கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் காதலர்களிடையே இந்த சேவைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இருக்கிற மொபைலை தலைமுழுகிவிட்டு, எப்படியாவது புதிய 3 ஜி தொழில்நுட்பம் கொண்ட செல்போன்கள் வாங்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர் இவர்கள்.

இந்த கருவிகளை வைத்திருப்போர் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் மையத்திற்கு சென்று 3 ஜி சிம் கார்டுகள் பெறலாம். விலை ரூ.59 மட்டுமே.

ஏற்கனவே பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களாக இருப்பவர்களும் இத்திட்டத்தில் சேரலாம். ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு சந்தாதாரர்கள் 3ஜி தொழில் நுட்பத்தை பயன்படுத்த அதற்குரிய கட்டணத்தை செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

திட்டம் அறிமுகப்படுத்திய 2 நாட்களில் 700 பேர் 3ஜி இணைப்பை பெற்றுள்ளனர் என்று பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது.

திட்ட அறிமுக சலுகையாக உள்ளூர் அழைப்புகளுக்கு ஒரு நிமிடத்திற்கு 30 பைசாவும், எஸ்.டி.டி. அழைப்புக்கு 50 பைசாவும் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாதத்திற்குள் 1 லட்சம் வாடிக்கையாளர்களை இத்திட்டத்தில் சேர்க்க பி.எஸ்.என்.எல். இலக்காக கொண்டு செயல்படுகிறது. இந்த வசதி விரைவில் தமிழகம் முழுவதும் அறிமுகப் படுத்தப் போகிறார்களாம்.

2.5 லட்சம் பேருக்கு ஐடி துறையில் வேலை

0 comments


இந்தியாவில் 2.5 லட்சம் பேருக்கு ஐடி துறையில் வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளதாக இன்போசிஸ் நிறுவன இயக்குனர் மோகன்தாஸ் பை கூறியுள்ளார்.இது குறித்து அவர் கூறியதாவது:வேலைவாய்ப்பு நிலைமையில் கணிசமான மாற்றம் ஏற்பட்டுள்ளது. சென்ற ஆண்டு போல மோசமான நிலைமை இந்த ஆண்டு தொடராது. 2 முதல் 2.5 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கக்கூடும். 100 புதிய வேலை வாய்ப்புகள் ஒரு ஐடி கம்பெனியில் உருவாக்கப்படுவதாக வைத்துக் கொள்வோம்.



அதில் 65 இடங்கள் புதிதாக கல்வி முடித்தவர்களுக்கு வழங்கப்படும். மீதமுள்ள 35 இடங்கள் அனுபவம் உள்ளவர்களுக்கு கிடைக்கும்.சென்ற ஆண்டு மொத்தம் 16,000 பேரை வேலைக்கு எடுத்தோம். இந்த ஆண்டு 20 ஆயிரம் பேரை வேலைக்கு எடுப்போம். வேலையிலிருந்து இடையில் நிற்போர் இன்போசிஸைப் பொருத்தமட்டில் 10 சதவீதம். ஊழியர்களுக்கு 7 முதல் 8 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது என மோகன்தாஸ் தெரிவித்தார்.

Related Posts with Thumbnails