Thursday, November 5, 2009

ஐ.டி., பிபிஓ நிறுவனங்களில் சம்பளம் 16% வரை குறைப்பு

சர்வதேச நிதி நெருக்கடியால் ஐ.டி., அவுட்சோர்சிங் நிறுவன ஆர்டர்கள் சரிந்துள்ள நிலையில், முன் அனுபவம் இல்லாத ஊழியர்கள் சம்பளத்தை நிறுவனங்கள் 16 சதவீதம் வரை குறைத்து விட்டன. சர்வதேச நிதி நெருக்கடியால் இந்தியாவின் ஆர்டர்கள் குறைந்து ஐ.டி., பிபிஓ நிறுவனங்களின் லாபம் பாதித்தது. இப்போது நிலைமை சீராகி வந்த போதிலும், புதிதாக பணியில் சேர்க்கப்படும் அனுபவமற்ற பட்டதாரிகளுக்கு முன்பு வழங்கப்பட்ட சம்பளம் இப்போது அளிக்கப்படுவதில்லை. ஆண்டுதோறும் சுமார் 3 லட்சம் கம்ப்யூட்டர் சயின்ஸ், பொறியியல் பட்டதாரிகள், படிப்பை முடித்து வெளியே வருகின்றனர். டிசிஎஸ், இன்போசிஸ் உட்பட நூற்றுக்கணக்கான ஐ.டி., சேவைத் துறையில் வேலைக்காக விண்ணப்பிக்கின்றனர். ஐ.டி. நிறுவனங்களின் நிலைமை ஓராண்டுக்கு முன்பு இருந்ததைப் போல இல்லாததால், பாதிக்கு மேற்பட்டோருக்கு வேலை கிடைப்பதில்லை. படிப்பை முடித்து புதிதாக வேலை தேடுவோரின் சம்பளம் 10 முதல் 16 சதவீதம் வரை குறைந்து விட்டது.

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails