Tuesday, November 17, 2009

25 வருட சிறை தண்டனை காப்பாற்றியது பேஸ்புக்

பேஸ்புக் எனப்படும் சோஷியல் நெட்வொர்க் இணையதளத்தால் 25 வருட சிறை தண்டனையிலிருந்து தப்பியுள்ளார் ஒரு வாலிபர்.

அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்தவர் ராட்னி பிராட்பர்டு. புரூக்லின் நகரில் உள்ள ஒருவரது வீட்டில் துப்பாக்கியுடன் நுழைந்து திருடியதாக இவர் மீது புகார் எழுந்தது. இதையடுத்து காவல் துறையினர் அவரை கைது செய்து விசாரணை செய்தனர். எனினும், குற்றம் நடைபெற்றதாகக் கூறப்படும் நேரத்தில் அவர் பேஸ்புக் இணையதளத்தில் வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்தது உறுதி செய்யப்பட்டது.

இதனால் கைது செய்யப்பட்ட 13வது நாளில் பிராட்பர்டு விடுதலை செய்யப்பட்டார். இவர் மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாக, அப்பகுதி மாவட்ட நீதிமன்றத்தின் செய்தித் தொடர்பாளர் ஜோனா ப்ருனோ தெரிவித்துள்ளார். துப்பாக்கியுடன் திருட்டில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டிருந்தால், அந்த இளைஞர் 25 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்திருக்க வேண்டியிருக்கும் என வழக்கறிர் ராபர்ட் ரூலன்ட் தெரிவித்தார்.

இதுகுறித்து பிராட்பர்டு கூறுகையில் திருடியதாக கூறப்பட்ட நேரத் தில், ஏற்கனவே திட்டமிட்டபடி ஓட்டலுக்கு வராமல் போன என்னுடைய காதலியை திட்டிக் கொண்டிருந்தேன்என்றார்.

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails