Sunday, November 15, 2009

வாடிக்கையாளர் கணக்கில் முறைகேடு சுவிஸ் வங்கிக்கு ரூ.62 கோடி அபராதம்

வாடிக்கையாளர்களின் கணக்கை, 4 ஊழியர்கள் தவறாக பயன்படுத்தியதற்காக சுவிட்சர்லாந்தின் யுபிஎஸ் வங்கிக்கு ரூ.62 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 2006 முதல் டிசம்பர் 2007 வரையிலான காலத்தில், பிரிட்டனில் உள்ள யுபிஎஸ் கிளையின் உயர் அதிகாரிகள் சிலர், வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கை தவறாக பயன்படுத்தி இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளனர். அனில் அம்பானியின் ரிலையன்ஸ் எனர்ஜி மற்றும் ரிலையன்ஸ் நேச்சுரல் ரிசோர்சஸ் ஆகிய 2 இந்திய நிறுவனங்களின் கணக்குகள் உட்பட 39 வாடிக்கையாளர்களின் கணக்குகளில் முறைகேடு நடைபெற்றுள்ளது.

எனினும், வாடிக்கையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படாதவாறு பார்த்துக் கொண்டுள்ளனர். வெளிநாட்டு முதலீடாக இந்திய பங்குச் சந்தைகளில் அந்த பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் மூலம் ரூ.200 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளது. இந்த புகார் குறித்து விசாரித்த பிரிட்டனின் நிதி சேவை ஆணையம், ஊழியர்களை கண்காணிக்கத் தவறிய யுபிஎஸ் வங்கிக்கு ரூ.60 கோடி அபராதம் விதித்துள்ளதாக பிரிட்டனில் பத்திரிகை செய்தி தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails