Wednesday, November 11, 2009

லேண்ட் லைன் வடிவில் மொபைல் போன் பி.எஸ்.என்.எல். அறிமுகம்


முதியோர் எளிமையான முறையில் மொபைல் போன்களை கையளும் வகையில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் லேண்ட் லைன் போன் வடிவில் மொபைல் போன் அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து பி.எஸ்.என்.எல். துணைக் கோட்டப் பொறியாளர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பி.எஸ்.என்.எல். நிறுவனம் மொபைல் போன்களை முதியோர் எளிமையான முறையில் கையாளும் நோக்கத்தில் லேண்ட் லைன் போன் வடிவில் அதே இயக்கத்தில் ஜி.எஸ்.எம். பிக்ஸ்ட் ஒயர்லெஸ் மொபைல் போனை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த போனில் சிம் கார்டுகளை செருகி பேசலாம். தரைவழி தொலைபேசியை எவ்வாறு கையாளுகின்றோமோ அதே போல் எளிமையாக இதை இயக்க முடியும்.

பிரீ பெய்ட், போஸ்ட் பெய்ட் 2 வகையான சிம் கார்டுகளில் எதை வேண்டுமானாலும் இதில் உபயோகிக்கலாம். மொபைல் போனில் உள்ள ஒலியின் தரத்தை விட இதன் ஒலி தெளிவாகவும் நன்றாகவும் இருக்கும். எல்லா பி.எஸ்.என்.எல். நிறுவனங்களிலும் தற்போது இந்த போன் கிடைக்கும். பிரீ பெய்ட் சேவையில் ஒரு வினாடிக்கு ஒரு பைசா என்ற திட்டம் தற்போது அமலில் உள்ளது. இந்த சேவையைப் பெற ரூ.45க்கான பூஸ்டர் கார்டை உபயோகிக்க வேண்டும். இதன் மூலம் தமிழ்நாடு வட்டத்திற்குள் பேசும் போது ஒரு வினாடிக்கு ஒரு பைசா கணக்கிடப்படும். இதைத் தவிர ரூ.49க்கான பூஸ்டர் கார்டை உபயோகிக்கும் போது எந்த மொபைல் போனுக்கு பேசினாலும், எஸ்.டி.டி பேசினாலும் ஒரு நிமிடத்திற்கு 49 பைசா திட்டம் நடைமுறையில் உள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார் துணைக் கோட்டப் பொறியாளர்.

WIN FREE LAPTOP : http://ezlaptop.com/?r=904180 

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails