Sunday, November 22, 2009

வருகிறது பாலிமர் நோட்டு!

ரூபாய் தாள்கள் சீக்கிரம் சேதமாகி விடுவதால், அத்தனை சீக்கிரம் அழியாத பாலிமர் ரூபாய் நோட்டுக்களை புழகத்தில் விட மத்திய அரசு தயாராகி வருகிறது.

முதல்கட்டமாக 10 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வருகின்றன.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் நமோ நாராயண் மீனா எழுத்து மூலம் அளித்த பதிலில், "ரூபாய் நோட்டுகளின் ஆயுட்காலத்தை அதிகரிப்பதற்காக சோதனை அடிப்படை யில் ஒரு பில்லியன் பாலிமர், பத்து ரூபாய் நோட்டுத் தாள்களை வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சோதனை அடிப்படையில் பாலிமர் நோட்டுகளை வாங்கும் பணிகளை இந்திய ரிசர்வ் வங்கி தொடங்கியுள்ளது.

பத்து ரூபாய் நோட்டுகளில் பாலிமர் நோட்டுகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் கள்ள நோட்டுகளின் புழக்கம் வெகுவாக குறையும்" என்று தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாதான் முதன் முதலில் பாலிமர் நோட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விட்டது.

அந்த வெற்றியைப் பார்த்து இன்று பல ஐரோப்பிய நாடுகளும் பாலிமரை நோட்டுக்களை அறிமுகப்படுத்தி, நோட்டடிக்கும் செலவைக் குறைத்தன.

அட பக்கத்து நாடுகளான இலங்கை, பங்களாதேஷ் மற்றும் நேபாளத்தில் கூட இந்த பாலிமர் நோட்டுதான் புழக்கத்தில் உள்ளது.

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails