Tuesday, December 15, 2009

தரமற்ற கம்ப்யூட்டர் சப்ளை பாதிக்கப்பட்டவருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு???????


சென்னை, சூளைமேடு வன்னியர் தெருவைச் சேர்ந்த கவுதமி என்பவர் சென்னை ஆற்காடு சாலையில் உள்ள கிருஷ்ணா அண்ட் கோ நிறுவனம் மீது மயிலாப்பூரில் உள்ள தெற்கு நுகர்வோர் நீதிமன் றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், கிருஷ்ணா நிறுவனம் தனக்கு கம்யூட்டர் சப்ளை செய்ததில் குறைபாடு உள்ளது. இதனால், தனக்கு ரூ.4 லட்சத்து 80,000 இழப்பு ஏற்பட்டது. என்று கூறியிருந்தார். 
 
வழக்கை விசாரித்த நீதிபதிகள், கிருஷ்ணா நிறுவனம் பாதிக்கப்பட்ட கவுதமிக்கு இழப்பீடாக ரூ.20,000 வழங்க உத்தரவிட்டனர். கிருஷ்ணா அண்ட் கோ மேல் முறையீடு செய்தது. நீதிபதி எம்.தணிகாசலம், உறுப்பினர் குணசேகரன் ஆகியோர் வழக்கை விசாரித்தனர். கிருஷ்ணா அண்ட் கோ நிறுவனம் குறைபாடான கம்யூட்டரை சப்ளை செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியானது என்று தீர்ப்பளித்தது.???????????

2 comments:

  1. உங்களது குறள் தொகுப்பு அருமையாக உள்ளது நண்பரே....
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete

Related Posts with Thumbnails