Monday, November 30, 2009

நோக்கியா சென்னை 3 ஜி மொபைல் தயாரிப்பு தீவிரம்!


சென்னை மற்றும் தமிழகத்தில் 3 ஜி செல்போன் சேவை விரிவாக்கப்பட்டு வருவதையடுத்து, முன்னணி மொபைல் கருவி தயாரிப்பு நிறுவனங்கள் 3 ஜி வசதி கொண்ட மொபைல் தயாரிப்பில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளன.

சென்னை அருகே பெரும் தொழிற்சாலைகளை அமைத்துள்ள நோக்கியா சீமென்ஸ் நெட்வொர்க் மற்றும் மோட்டாரோலா நிறுவனங்கள் இனி 3 ஜி மொபைலை அதிகம் தயாரிக்கப் போவதாக அறிவித்துள்ளன.

நோக்கியாவின் புதிய ஆலை படப்பை அடுத்துள்ள ஒரகடத்தில் அமைந்துள்ளது. இந்தத் தொழிற்சாலையில் அடுத்த ஆண்டு மே மாதம் முதல் 3 ஜி மொபைல் உற்பத்தி துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள இந்த நிறுவனத்தின் இன்னொரு ஆலையில் இப்போது 2 ஜி மொபைல்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டு வருகின்றன.


அடுத்த, ஆண்டு 3 ஜி ஏலத்தை மத்திய அரசு முடிக்கும் தறுவாயில் மேலும் அதிக மொபைல்கள் தேவைப்படும். எனவே இந்த தேவையைச் சமாளிக்க ரூ 300 கோடியை கூடுதலாக முதலீடு செய்கிறது நோக்கியா சீமென்ஸ் நெட்வொர்க்.

மோட்டாரோலா நிறுவனமும் இதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளது.

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails