Monday, November 30, 2009

கம்ப்யூட்டர் சர்வர் கோளாறு: கேட் தேர்வு ரத்து


கமப்யூட்டர் சர்வரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சென்னை உள்பட பல்வேறு தேர்வு மையங்களில் நடந்த கேட் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் மேனேஜ்மெண்ட் (ஐ.ஐ.எம்.,) கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக கேட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் முதன் முறையாக நவம்பர் 28ம் தேதி ஆன்லைனில் நடத்தப்பட்டது. ஆனால் கம்ப்யூட்டர் சர்வர்களில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக சென்னை, பெங்களூரு, லக்னோ, சண்டிகார் ஆகிய இடங்களில் உள்ள தேர்வு மையங்களில் தேர்வு ரத்தானது.

கேட் தேர்வு ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில் , தேர்வு எழுத முடியாதவர்களுக்கு புதிதாக வேறொரு நாளில் தேர்வு நடத்தப்படும். தேர்வுக்கான புதிய நாட்கள் விரைவில் அறிவிக்கப்படும். இதுபோன்ற பிரச்சினை எதிர்காலத்தில் ஏற்படாமல் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

மத்திய மனித வளத்துறை அமைச்சர் கபில் சிபல் கூறுகையில், கேட் தேர்வு தேதிகளை மாற்றியமைக்க வேண்டிய அவசியம் இல்லை. சர்வர் கோளாறால் தேர்வு எழுத முடியாமல் பாதிக்கப்பட்ட மாணவர்கள், அடுத்த ஒன்பது நாட்களுக்கான தேர்வுகளில் தொடர்ந்து கலந்து கொள்ளலாம் என்றார்.

முன்னர், கேட் தேர்வு பேப்பர் - பென்சில் தேர்வாக நடந்து வந்தது. தற்போது அதை ஆன்லைன் தேர்வாக மாற்றி அமைத்ததால், அத்தேர்வு எழுதுபவர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இவ்வாறு தேர்வு முறையை மாற்றியமைத்ததால், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கேட் தேரவு எழுதுபவர்கள் சதவீதமும் குறைந்திருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails