Monday, December 14, 2009

வசூலாகாத கடனை சமாளிக்க வங்கிகளுக்கு உதவ வெப்சைட் அறிமுகம்


வசூலாகாத கடனை சமாளித்து சொத்தாக மாற்றும் வகையில் வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு உதவும் ரேவிஷ் பி சர்வ் என்ற இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளது.வசூலாகாத கடன் நிர்வகிப்பில் சிறந்து விளங்கும் நிறுவனம் ரேவிஷ். அதன் சார்பில் www.reyvishbserve.com என்ற இணைய தளம் தொடங்கப்பட்டு உள்ளது. வங்கிகள், நிதி நிறுவனங்கள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் (என்பிஎப்சி) ஆகியவை தங்களிடம் உள்ள வசூலாகாத கடன் விவரங்களை இந்த இணைய தளத்தில் பதிவு செய்யலாம்.வசூலாகாத கடன்களை (என்பிஏ) சொத்தாக மாற்றும் வகையில் கடன் வசூலிப்பில் புதிய தொழில்நுட்பங்களை ரேவிஷ் பி சர்வ் இணைய தளம் அளிக்கிறது. 
 
கடன் வசூலிப்பில் அவை வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இந்த இணைய தளத்துடன் அரசு வங்கிகள் உட்பட பல நிதி நிறுவனங்கள் தொடர்பு கொண்டுள்ளன. வசூலாகாத கடனுக்கான அசையும், அசையா சொத்துகளை சட்டரீதியாக பிரச்னையின்றி ஏலம் விட்டு என்பிஏ&வை குறைக்க ரேவிஷ் பி சர்வ் உதவுகிறது. கடன் வசூலிப்பு நடைமுறைகளை விளக்குவதுடன், சர்பாசி சட்டப்படி ஏலம் நடத்துதல், தீர்ப்பாய உத்தரவு பெற்று ஏலம் விடுதல், வங்கி சாரா நிதி நிறுவனங்களால் பறிமுதலான வாகனங்கள், சொத்துகளை ஆன்லைன் ஏலம் விடுதல் ஆகியவற்றிலும் ரேவிஷ் பி சர்வ் சிறந்து விளங்குகிறது.

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails