Monday, December 14, 2009

நோக்கியாவில் தொடரும் பணிநீக்கம்!


முன்னணி மொபைல் உற்பத்தி நிறுவனமான நோக்கியா, தனது பின்லாந்து கிளையின் ஊழியர்களில் கணிசமானோரை வேலை நீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

வருகிற 2010-ம் ஆண்டில் இந்த பணி நீக்கம் தொடங்கும் என்றும் ஆண்டு முழுவதும் 90 நாட்களுக்கு ஒருமுறை 20 சதவிகித ஊழியர்கள் நீக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோக்கியா நிறுவனத்துக்கு பின்லாந்தில் சலோ என்ற நகரில் ஒரே ஒரு தொழிற்சாலை உள்ளது. இதில் 2000க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகிறார்கள்.

"மார்க்கெட் நிலவரம் மோசமாக உள்ளது.இப்போதைக்கு எல்லா பணியாளர்களுக்கும் வேலை தருவது சாத்தியமல்ல. முதலில் நிறுவனத்தைக் காப்பதுதான் முக்கியமாக உள்ளது" என்றார் நோக்கியாவின் செய்தி தொடர்பாளர்.

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails